MOST RECENT

|

பிரித்தானியாவில் மோசமான காலநிலை : மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை


நேற்றிரவு பிரிட்டனின் பல இடங்களில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் மேல் போனது. எதிர்பார்த்ததை விட மிக அதிகமான பனிப்பொழிவும் இருந்தது. ஸ்காட்லாந்து, வட கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் அண்ணளவாக 15 அங்குல பனிப்பொழிவு நேற்று பதிவாகியுள்ளது.

மேலும் வானிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இந்த பகுதிகளில் 40 செண்டிமீட்டர் அளவிற்கு பனிபொழிவு இருக்கும் என்ற எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன.
தேவையின்றி சாலைகளுக்கு வருவதை தவிர்த்து உள்ளேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு போலீஸ் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மோசமான் வானிலையினால் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியும் வருகின்றன. ஷெப்பீல்டு அருகே எம்.1 நெடுஞ்சாலையில் நேற்று நடந்த சாலை விபத்தில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாயை காப்பாற்றச் சென்ற ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று விடுமுறை நாள் என்பதால் ஷாப்பிங் சென்ற மக்கள் பனிப்பொழிவினால் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

Posted by Tech on 8:55 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "பிரித்தானியாவில் மோசமான காலநிலை : மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை"

Leave a reply

Blog Archive

Recently Commented

Recently Added