MOST RECENT

|

10 ஆண்டுகளுக்கு பின் மகனை சந்தித்த தாய்



10 ஆண்டுகளுக்கு பின் மியர்மர் எதிர்க்கட்சி தலைவி தனது மகனை சந்தித்தார்.மியான்மரின் எதிர்க்கட்சி தலைவி சூ கியூ (65). ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால் 20 ஆண்டுகள் இவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சூ கியூ வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சூ கியூவின் 2-வது மகன் கிம் ஆரிஸ் (33) பாங்காக் நகரில் தங்கியுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் சூகி யூவை சந்தித்தார். தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தனது தாயை நேரில் சந்திக்க மியான்மர் அரசிடம் விருப்பம் தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு பாங்காக்கில் உள்ள மியான்மர் தூதரகம் விசா வழங்கியது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை விமானம் மூலம் யன்கூன் வந்து சேர்ந்தார்.

விமானத்தில் இருந்து இறங்கிய அவர் தன்னை சந்திக்க அங்கு காத்திருந்த தனது தாயார் சூ கியூவை கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தாயும் மகனும் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.

நெகிழ்ச்சியான இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களின் கண்களிலும் நீரை வரவழைத்தது.

Posted by M.Ariff Alavi on 10:01 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

1 comments for "10 ஆண்டுகளுக்கு பின் மகனை சந்தித்த தாய்"

Leave a reply

Blog Archive

Recently Commented

Recently Added